Monday, October 24, 2011

அஸ்திவாரமற்ற வரலாற்று கோட்டை

கடந்த சில வருடங்களாக இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது மற்றும் நானும் கூட இணையத்தினை பெரும்பாலான தேடல்களுக்கு பயன்படுத்தி வருகிறேன்,  முதலில் இம்மானுவேல் சேகரன் என குறிசொல் கொடுத்து தேடினால் வரும் முடிவுகள் பெரும்பாலும் இம்மானுவேல் என்பவர் முதுகுளத்தூர் கலவரத்தில் கொல்லபட்டார் என்றே கிடைக்கும், ஆனால் இன்று இதே குறிச்சொல்லை கொண்டு தேடினீர்கள் எனில் அதில் கிடைக்கும் முடிவுகள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் உரிமைக்காக போராடிய தியாகி என பிறகு  ஆதிக்க சாதிகளை எதிர்த்து போராடியவராகவும் என பலவேறு முடிவுகளை குப்பைகளை தேடு பொறி கொட்டி கொண்டிருக்கிறது . மிக சரியாக திட்டமிட்டு இம்மானுவேல் சேகரனை ஒரு நாயகனாக காட்டும் சிலவலைப்பூக்கள் மற்றும் அவர் இனம் சார்ந்தவர்கள் இயக்கி  வருவது குறிப்பிடத்தக்கது .அதே சமயம்  சில இஸ்லாமிய நாளிதழ்களும் வலைப்பூக்களும் கூட உண்மை தெரியாமல் தேவரை எதிர்ப்பதன் மூலம் இந்து மதத்தை சாடுவதாக நினைத்து கொண்டு தேவர் குறித்த அபாண்டமான பொய் உரைகளை வெளியிட்டு வருகிறார்கள். இம்மானுவேல் குறித்து தலித் இயக்கங்கள் மட்டுமல்லாமல் ஏனைய இனமக்களும் பகுத்தறிவு பகலவனின் கொடுக்குகளும் இணைந்தே இந்த வரலாற்று பிழையை செய்து வருகின்றனர்.காரணம் ஒரு தலைவனுக்கு ஒரு இனம் சார்ந்த தலைவனுக்கு இத்தனை மதிப்பும் மரியாதையும் கிடைப்பதை  தங்களால் ஏற்று கொள்ளமுடியாத ஒரு வித எரிச்சாலான மனோநிலையே உண்மை அறிந்தவர்கள் இவ்விதம் செய்வார்களா என தெரியவில்லை காரணம் தங்களை தங்கள் அரசியல் கட்ச்சிகளை வளர்த்து கொள்ள வேண்டிய இந்த மூட அரசியல் வாதிகள் தேவர் இன  வாக்கு  வேண்டுமெனில் அய்யாவை புகழ்வதும் மற்ற இனங்களின் வாக்கு வேண்டுமெனில் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதும் ஒரு காரணமெனினும் இம்மானுவேலை தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவனாக முன்னிறுத்தி வெற்றி பெறவே பல இயக்கத்தினர் விரும்பிகின்றனர். அதுவும் தேவேந்திர வேளாளர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தினர் என எண்ணியே இவ்வாறு செய்கின்றனர் ஆனால் உண்மை என்ன? சமாதான கூட்டம் நடைபெறும் அறைக்கு தமதாக வரும் அய்யாவிற்கு மரியாதையை தரும் விதமாக அங்கே இருந்த பணிக்கர் உட்பட அனைவரும் எழுந்து நிற்கின்றனர் ஆனால் இம்மானுவேல் அவ்வாறு செய்வவில்லை அதற்கு அவரே கூறுவது நான் புதிய தலைமுறையின் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன் எனவும் தாழ்த்தபட்டவர்களின் தலைவர் இல்லையென்றும் பசும்பொன் அய்யாவை போல பெரும் கூட்டம் தன்னை பின் தொடரவில்லை என்றாலும் தனக்கு ஆதரவாளர் கூட்டம் இருப்பதாக கூறுகிறார். இதனை அங்கே இருந்த தலித் இனத்திற்கு அதரவாக வந்திருந்த பெருமாள் பீட்டர் என்பவர் கண்டிக்கிறார், பிறகு தேவர் அய்யா உணவு அருந்த செல்லும் பொது ஒரு பல்லனை இவ்வாறு பேச விட்டு விட்டீர்களே என கடிந்ததாக உங்கள் பொய் வரலாறு கூறுகிறது அவ்வாறு எனில் அதனை எவரிடம் கூறினார் என்ற கேள்விக்கு இதுவரை ஆதாரம் இல்லை மேலும், இம்மானுவேல் பள்ளர் இனத்தை சார்ந்தவர் அதாவது தேவேந்திர வேளாளர் , இவர் எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதியாக வந்தார், என்பன போன்ற கேள்விகளுடன் இதே கலவர வழக்கில் அய்யாவின்  வாக்குமூலம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இங்கே சென்று அய்யாவின் உரையை படியுங்கள்  
இதில் மிக தெளிவாக தனது நியாயங்களை வெளிபடுத்தி இருக்கிறார், இந்த படுகொலையின் மற்றும் கலவரத்திற்கு பின் உள்ள சூத்ரதாரிகள் யார் என்பதை உணர்ந்த கொள்ள முடியும். மேலும் மேலும் வரலாற்றை தங்கள் விருப்பபடி வளைக்க முயலும் நீங்கள் நாளை உங்கள் சுய அசிங்கமான முகம் வெளிப்படும்போது எதிர்கால சந்ததி முகத்தில் காரி உமிழுமே பிறந்த மண்ணுக்கு  செய்யும் நன்றி கடனா இது.இன்னும் ஐந்து ஆறு பத்தாண்டுகளுக்கு பின் ஒரு வேலை இப்படி பட்ட பதிவுகளை கூட இவர்கள் இடக்கூடும் இம்மானுவேல் காங்கிரசின் அரசின் தென் மாவட்டங்களின் மிக முக்கிய தூணாக விளங்கினார் ,காமராஜ நாடரின் போராட்டங்களை முன்னெடுத்து சென்று வெற்றி பெற்றவர் , என்பனவற்றை காணலாம் என நினைக்கிறேன் வரலாறு தூய கண்ணாடி போல உள்ளனவற்றை உள்ளபடியே காட்டும் விதம் இருக்க வேண்டும், இமானுவேல் சேகரன் வரலாற்றை உள்ளது உள்ளபடி  இருக்க  விடுங்கள், உங்கள் தலைவர் இம்மானுவேல் செய்தவற்றை சொல்வதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை, எனினும் பசும்பொன்  மீதான உங்கள் அபாண்டமான குற்றசாட்டுகளை கைவிடுங்கள் உங்களை சொல்லி ஒன்றுமில்லை முதலில் இமானுவேல் இப்பொழுது ராஜராஜ சோழனும் தேவேந்திர குல வேளாளர் என நிரூபிக்க உழைக்கிறீர்கள், அநேகமாக உங்களின் அடுத்த இலக்கு ஆபிரகாம் லிங்கனா,

No comments:

Post a Comment